யே தல காலு புரியவில்லடி
காலு தரமேல நடக்கவில்லடி
பகல் இரவு தெரியவில்ல டா
என் மயக்கத்துக்கு மருந்து சொல்லு டா
யே கோலி சோடா நான் வாங்கி தாரேன்
வாடி ஊத்திக்கலாம்
கேடி பில்லா கில்லாடி ரங்கா
வாடா கட்டிக்கலாம்
உன் காத்தாடும் முந்தானை கண்ண கட்டுதே
சேலத்தில் காய்க்கிற மாம்பழம் மாம்பழம்
சாப்பிட வேணுமே வாங்கி தாடி
தை மாசம் நாயனம் ஊதனும் ஊதனும்
டக்குன்னு பொண்ணு நீ கேட்டு வாடா
யே தல காலு புரியவில்லடி
காலு தரமேல நடக்கவில்லடி
யே பகல் இரவு தெரியவில்ல டா
என் மயக்கத்துக்கு மருந்து சொல்லு டா
கும்முன்னு நீதான் நிக்குற புள்ள
கூப்புட்டா கம்முன்னு வரமாட்டுற
தஞ்சாவூர் பொம்ம நான் தான் டா இப்போ
நீ என்ன சொன்னாலும் தலையாட்டுறேன்
உன் கெண்டகால் அழகுல தான்
என் மண்ட நான் உடையுறேன்டி
அட வேணாண்டா டகுலு
இப்போ நீ நகரு
ஒரு தாலிய போட்டதும் நீ ஊது பிகுலு
சேலத்தில் காய்க்கிற மாம்பழம் மாம்பழம்
சாப்பிட வேணுமே வாங்கி தாடி
யே தை மாசம் நாயனம் ஊதனும் ஊதனும்
டக்குன்னு பொண்ணு நீ கேட்டு வாடா
பூச்சாண்டி போல பயம் காட்டும் கண்ணு
ஆத்தாடி என் நெஞ்ச பந்தாடுது
தாழ்ப்பாள போட்டு நான் பூட்டினாலும்
அழகெல்லாம் உன்னால கூத்தாடுது
அடி கண்டாங்கி நீ கட்டுற
என்ன துண்டாக்கி ஏன் போகுற
அட வேணாமே கோபம்
நீ கேளு தாரேன்
இனி உன்னோட கை கோர்த்து ஒன்னாகவே வாழுறேன்
(ஒன்னாகவே வாழுறேன்)
(ஒன்னாகவே வாழுறேன்)
சேலத்தில் காய்க்கிற மாம்பழம் மாம்பழம்
சாப்பிட வேணுமே வாங்கி தாடி
தை மாசம் நாயனம் ஊதனும் ஊதனும்
டக்குன்னு பொண்ணு நீ கேட்டு வாடா