Lyrics

உன்னை பார்த்த பின்பு கண்ணில் தூக்கம் ஏது அன்பே அன்பே வானம் பார்த்த பின்பு பூமி பூத்ததிங்கு அன்பே அன்பே உன்னை பார்த்த பின்பு கண்ணில் தூக்கம் ஏது அன்பே அன்பே வானம் பார்த்த பின்பு பூமி பூத்ததிங்கு அன்பே அன்பே நீர் விட்ட பின்பு வேர்விட்ட அன்பு வாடக்கூடாது அன்பே வாடியதென்ன வசந்தங்கள் வந்து பூக்கள் பூக்கும் முன்பே உன்னை பார்த்த பின்பு கண்ணில் தூக்கம் ஏது அன்பே அன்பே கொட்டும் மழையினில் காதலி போனால் குடைபோல செல்வான் கூட திருவடி நடக்கையில் வலித்தாலே தோளில் தாங்குவான் வண்ண கூந்தலில் காதலி சூட உயிர் பூவை கேட்டால் கூட எடுத்துக்கொள் பறித்துக்கொள் உயிர் தோழி என்றே கூறுவான் காதல் என்பது கடவுள் போன்றது உள்ள போதும் இல்லை என்று அதை என்ன தோன்றுது உன்னை பார்த்த பின்பு கண்ணில் தூக்கம் ஏது அன்பே அன்பே வானம் பார்த்த பின்பு பூமி பூத்ததிங்கு அன்பே அன்பே இங்கு இருவரும் ஊமைகள் போலே மொழி இன்றி வார்த்தை பேச அவரவர் மனம் அதை அறியாதோ அர்த்தம் வேண்டுமோ வந்த பிரிவுக்கு யார் பதில் கூற விடையேதும் இல்லா கேள்வி இனி ஒரு தருணத்தில் இரு ஜீவன் இங்கே கூடுமோ காதல் என்பது கடவுள் போன்றது உள்ள போதும் இல்லை என்று அதை என்ன தோன்றுது உன்னை பார்த்த பின்பு கண்ணில் தூக்கம் ஏது அன்பே அன்பே வானம் பார்த்த பின்பு பூமி பூத்ததிங்கு அன்பே அன்பே நீர் விட்ட பின்பு வேர்விட்ட அன்பு வாடக்கூடாது அன்பே வாடியதென்ன வசந்தங்கள் வந்து பூக்கள் பூக்கும் முன்பே உன்னை பார்த்த பின்பு கண்ணில் தூக்கம் ஏது அன்பே அன்பே வானம் பார்த்த பின்பு பூமி பூத்ததிங்கு அன்பே அன்பே
Writer(s): Vaalee, Satish Chakravarthy Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out